சனி, 10 அக்டோபர், 2009

                                              ஆடம்பரத் திருமணத்தை ஒழிப்போம்!



மனிதன், தனது ஆடை பிறரைக் கவர வேண்டும் என்பதற்காகப் பல கடைகள் ஏறி இறங்கி வாங்குகிறான். கா-ல் அணியும் செருப்பைக் கூட வாங்கும் போது, இது நன்கு உழைக்குமா? தரமானதா? என்று பார்த்துப் பார்த்து வாங்குகின்றான். இவ்வாறு கைக்குட்டையி-ருந்து காலணி வரை பல மணி நேரங்களை செலவழித்து பார்த்துப் பார்த்து வாங்கும் மனிதன், மறுமைக்காக எந்த ஒன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வதில்லை. அதனால் தான் நமது சமூகத்தில் வரதட்சணை என்னும் உயிர்கொல்- தலைவரித்து ஆடுகின்றது.
தனது பிள்ளையின் திருமணத்தை ஊர் மெச்ச வேண்டும், அது அழியா நினைவாய் மக்கள் முன் இருக்க வேண்டும், என்றும் இந்தத் திருமணத்தைப் போல் வேறு எந்தத் திருமணத்தையும் பார்த்ததேயில்லை என்று மக்கள் புகழாரம் சூட்டவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களே!


அல்லாஹ்வின் தூதர் காட்டித் தந்த சுன்னத்தைப் பின்பற்றி அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவது மகிழ்ச்சியா? இல்லை, பணத்தை இறைத்து ஆடம்பரத்தை முகஸ்துதிக்காகக் காட்டி அந்த ஒரு நாள் மட்டும் பெறும் இன்பம் பெரிதா? சிந்தியுங்கள்!


குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரக்கத் நிறைந்ததாகும் என்ற நபிகளாரின் நபிமொழியை நீங்கள் உற்று நோக்கியது உண்டா?
நபிவழியின் அடிப்படையில் திருமணத்தை எளிமையாக நடத்துங்கள் என்று கூறினால், "திருமணம் என்பது வாழ்நாளில் ஒரு தடவை வரக் கூடியது; அதனால் அது மிகப் பெரிய இன்பமாக இருக்க வேண்டும்' என்று கூறுகின்றார்கள்.


மனிதன் மூலம் கிடைக்கும் இன்பத்தை விட இறைவன் மூலம் கிடைக்கும் பரகத், இவர்களுக்குக் குறைவாகத் தெரிகிறது. திருமணத் தம்பதிகளுக்கு முதன் முதல் கிடைக்க வேண்டியது இறைவனின் அருள் தான். அது எளிமையாக நடக்கும் திருமணத்தில் தான் கிடைக்கும் என்று நபிகளார் கூறிய பிறகும் ஆடம்பரத் திருமணத்தை எந்த முஸ்-மும் தேர்ந்தெடுப்பானா?
இறைவனின் அருள் இருந்தால் தான் திருமணத்திற்குப் பிறகு நடக்கும் சோதனைகள், பிரச்சனைகளி-ருந்து தம்பதிகள் விடுபட முடியும். இதை யாரும் புரிந்து கொள்வதில்லை. தங்களது பிள்ளைகள் திருமணம் என்னும் பந்தத்தின் மூலம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமா? இறையருள் பெற்று இன்பம் பெற வேண்டாமா? பெற்றோர்களே சிந்தியுங்கள்!


ஆடம்பரத் திருமணத்தை நடத்துபவர்களே! திருமணத்தைக் கானல் நீராய் பார்த்துக் கொண்டிருக்கும் ஏழைக் கன்னியரை சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் செய்யும் ஆடம்பரத் திருமணங்கள், அதனால் ஏற்படும் செலவுகள், ஏழைகளையும் இவ்வாறு திருணம் செய்ய வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி, அவர்கள் திருமணம் என்பதையே வாழ்நாளில் நினைத்துப் பார்க்க முடியாத நிலைக்குக் கொண்டு சென்று விடுகிறது.


ஆடம்பரத் திருமணத்தை நடத்த விரும்புவர்கள் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை எண்ணிப் பார்க்கட்டும்.


அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். (அல்குர்ஆன் 4:38)


உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் 7:31)
விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)


நீங்கள் ஷைத்தானின் நண்பராக வேண்டுமா? அல்லது இறையருளைப் பெறுவோராக மாற வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக