இன்ஷா அல்லஹா
மேகா டிவியில் ரமளான் மாதம் முழுவதும் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை
மணிகுலத்திற்கு இஸ்லாம் வழங்கியுள்ள நன்மைகள்
சிறப்புரை
மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன்
பாருங்கள்! பார்க்கச் செய்யுங்கள்
இன்ஷா அல்லஹா
மேகா டிவியில் ரமளான் மாதம் முழுவதும் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை
மணிகுலத்திற்கு இஸ்லாம் வழங்கியுள்ள நன்மைகள்
சிறப்புரை
மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன்
பாருங்கள்! பார்க்கச் செய்யுங்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி கிளையின் சார்பாக பொள்ளாச்சி மஹாராஜாமஹாலில் 02.08.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 5-மணிக்கு இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மாநிலத்தலைவர் பக்கீர்முஹம்மத் அல்தாபிஅவர்கள் மக்களின் கேள்விக்கனைகளுக்கு அழகான முறையில் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் பதிலளித்தார்கள்.
இரவு 9-மணி ஆனபின்பும் மக்கள் ஆவலோடு இருந்தும் நிகழ்ச்சியை தொடரமுடியாமல்போனதுதான் வருத்தத்தை ஏற்படுத்தியது அப்பகுதி மக்களுக்கு.பெருந்திரளாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்துகொண்டனர்.
மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்
காட்டுமன்னர்குடி முஸ்லிம் தெருவில் 02.08.09 அன்று மாபெரும் வரதச்சனை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுகூட்டம்நடைபெற்றது.மாவட்ட பொருளாளர் ஹாஜி அலி தலைமைதாங்கினார்கள், நகர நிர்வாகிகள் நிர்வாகிகள் முன்நிலை வகித்தனர்.
பஜூலுல்லஹா அவர்கள் இறைவனின் நினைவில்லை என்ற தலைப்பிலும் அப்துர் ரஜ்ஜாக் (மாநில செயலாளர்) அவர்கள் வரதட்ச்சனை ஒர் வன் கொடுமை என்ற தலைப்பிலும் அப்துர் ரகுமான் பிர்தொவ்சி (மாநில பெச்சலாளர்) அவர்கள் சூடான மௌலுதும் சுவையான பாத்தியாயும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்
தம்மாம் TNTJ, அல்கோபர் கிங் பஹத் ஹாஸ்பிடலுடன் இணைந்து நடத்திய
மூன்றாவது மெகா இரத்த தான முகாம்கடந்த 07-08-2009 வெள்ளி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை அல்கோபர் கிங் பஹத் ஹாஸ்பிடலில் நடைபெற்றது.
நூற்றி முப்பதிற்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
கலந்துகொண்ட சகோதரர்களில் 119 சகோதரர்களால் மட்டுமே இரத்தக் கொடை கொடுக்க நேரமிருந்தது மருத்துவமனை இரத்த ஆய்வக ஊழியர்களில் பெரும்பான்மையானவர்கள் விடுமுறையில் இருந்தபோதிலும் பணியிலிருந்த மிகக் குறைந்த ஊழியர்களும், அதிகமான அளவில் கலந்து கொண்ட சகோதரர்களின் ஆர்வத்தைப் பார்த்து மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு TNTJ இரத்தக் கொடையாளர்களின் சேவையை வெகுவாகப் பாராட்டி ஆரவமூட்டினர்
எதிர்பார்த்ததற்கும் அதிகமான அளவில் இரத்தக்கொடையளித்ததை எண்ணி மண்டல நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் இறைவனுக்கு நன்றி பகன்றனர்
இஸ்லாமியர்களின் மூன்று வருட கடின முயற்சிக்குப்பின், தற்போது நியூ யார்க் நகர மாநகர சபை இஸ்லாமிய பெருநாளான ஈதுல் பித்ர் மற்றும் ஈதுல் அள்ஹா விற்கு அணைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இது அங்குள்ள இஸ்லாமியர்களிடையே மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. அங்கு தற்போது கிருத்துவ மற்றும் யூத பண்டிகைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இதுவரை இஸ்லாமிய பண்டிகைகளுக்கு விடுமுறை விடப்படுவது இல்லை. வார நாட்களில் பண்டிகை வந்தால் குழந்தைகள் சீக்கிரமாக தொழுதுவிட்டு பள்ளிகளுக்கு விரைந்து ஓடும் காட்சி பரிதாபகரமானது. இந்த தீர்மானம் பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அங்குள்ளவர்கள் சந்தோசப்படுகிறார்கள்.
நியூயார்க் நகரில் சுமார் 12% இஸ்லாமிய மாணவர்கள் படிப்பதாக அங்குள்ள வழக்கறிஞர்களின் புள்ளி விபரம் கூறுகிறது. இதை இன்னும் மேயர் ப்ளூம்பெர்க் ஒப்புதல் வழங்கவில்லை. அவர் ஒப்புதல் அழிப்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இன்ஷா அல்லாஹ் பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் செய்தி: எஸ்.ஜாஃபர் அலி phd
தினமணி கதிரில் (14.06.2009) 11ம் பக்கத்தில் 'அக்கரைச் சீமை' என்ற தலைப்பில் ராணி மைந்தன் என்பவர் எழுதிதியுள்ளார். அதில் சில விஷமக் கருத்துகளை கூறியுள்ளார். என்னவென்றால் 'தாலிபாகளுக்கு நம்பர் ஒன் எதிரி பெண் கல்வி' என்றும் பெண் கல்வி கூடாது என்று தாலிபான்கள் சொல்லக் காரணம் இது இஸ்லாமிய நெறி முறைகளுக்கு முரணானது என்று நினைப்பது தான் என்றும் தனது கருத்தை கூறியுள்ளார்.
இது தினமணியின் அறியாமையைத்தான் காட்டுகிறது. குர்ஆனின் முதல் வேத வெளிப்பாடான வசனமே 'இக்ராஹ்'. படிப்பீராக, கற்பீராக, ஓதுவீராக என்று தான் துவங்குகிறது. கல்விக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கும் வேதம் இஸ்லாம்தான். ஆண்களே கற்பீறாக என்றோ, பெண்களே கற்காதீர்கள் என்றோ இஸ்லாம் கூறவில்லை. அப்படி இருக்கும்போது பெண்கள் கல்வி கற்ப்பது இஸ்லாமிய நெறிமுறைக்கு முரணானது என்று கூறும் தினமணி அதன் அறிவின் வரட்சியை வெளிக்காட்டுகிறது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சிபுரிந்த போது போதைப் பொருள் உற்பத்தியை முற்றிலுமாக ஒழித்து கட்டியதற்காக ஐ.ந. சபையின் பாராட்டுதலைப் பெற்றிருந்தது என்பதை தினமணி மட்டுமல்ல வேறு யாரும் மறுக்க முடியாது.
ஆப்கானிஸ்தானில் குற்றங்கள் ஒழுக்கக்கேடுகள் குறைந்திருந்ததையும் மறுக்க முடியாது. ஆண்களும், பெண்களும் சேர்ந்து மேலை நாட்டு அரைகுறை ஆடைகளுடன் படிப்பதை தான் தாலிபான்கள் வெறுக்கின்றனர். உலக முஸ்லீம்கள் மத்தியில் தாலிபான்கள் மீது வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் அமெரிக்காவின் தலையீட்டை ஆப்கானிஸ்தானில் தொடர வேண்டும் என்பதற்க்காகவும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் ஆப்கன் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காகவும், அமெரிக்க ஏஜெண்டுகள் இது போண்ற கீழ்த்தரமான காரியங்களை செய்து விட்டு தாலிபான்கள் மீதும், அல்காயிதா மீதும் பழி போட்டு கொண்டிருக்கின்றனர்.
இஸ்லாம் பெண் கல்வியை எதிர்ப்பது போண்று எழுதப்பட்ட செய்திதான் இப்போது பிரச்சினையே! ஆணும், பெண்ணூம் இரண்டறக் கலந்து கற்க வழி வகுக்கக்கூடாது; அப்படி செய்தால் பல விதமான ஒழுக்க கேடுகள் அதாவது திருமணத்திற்க்கு முன்பே உடலுறவு வைத்து பிள்ளையைப் பெற்றெடுப்பது, பெண்கள் ஓடிப்போவது, தற்க்கொலை செய்து கொள்வது போன்ற கேடுகள் விளையும்.
எனவே ஆண், பெண் சேர்ந்து பயிலக்கூடது என்று தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்ள வேண்டும்.
தாலிபான்கள் பாகிஸ்தானில் அவர்கள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் ஜிஸ்யா வரி வசூலிப்பதாக வந்த செய்தியை கூட பாகிஸ்தான் ஹை கமிஷன் மறுத்துள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலையைகத்தில் இன்று (8-8-2009) காலை 11 மணிக்கு எஸ்.பி பட்டிணத்தில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் பிரச்சனை தொடர்பாக பிரஸ் மீட் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பக்கீர்முஹம்மது அல்தாஃபி மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத், பொருளாளர் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு நிரூபர்களுக்கு பேட்டியளித்தார்கள். பிரபல முன்னனி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து நிரூபர்களும் கேமரா மேன்களும் TNTJ மாநிலத் தலையைகத்தில் குவிந்தனர்.
மாநிலத் தலைவர் நீரூபர்களிடம்:
எஸ்.பி பட்டிணத்தில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் பிரச்சனை குறித்து விளக்கமளித்தார்கள். மேலும் சட்டத்திற்கு முரணாக அராஜகமாக நடந்து கொள்ளும் அரசையும் காவல்துறையையும் கண்டித்து முதற்கட்டமாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 17 ஆம் தேதி தமிழக முதல்வரை வீட்டை சுமார் 1 லட்சம் பேர் கூடி முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம் எனவும் கூறினார்கள்.